Spread the love

ஈரோடு ஆக, 31

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 614 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 615 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 39 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 265 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் உயிரிழந்து உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *