Spread the love

விருதுநகர் ஆக, 31

ராஜபாளையத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு காவல் துறையினர் சார்பில் நேற்று மாலை கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமை தாங்கினார். இதில் டவுன் தாலுகா ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், மகளிர் காவல் துறையினர் உள்பட 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தி சிலை ரவுண்டானா, பி.எஸ்.கே. பார்க், காந்தி கலை மன்றம், சொக்கர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் வரை சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *