காஞ்சீபுரம் ஆக, 31
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டையில் அமைந்துள்ள சென்னை இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நிப்பான் பெயிண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு சைக்கிள் லீக் சார்பாக தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சைக்கிள் லீக் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிகளில் நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் ப்ரோ ரேசெர்ஸ், டரான்சியர்ஸ் ராணிப்பேட்டை வேலூர், திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.