Spread the love

ஷாங்காய் செப், 16

சூறாவளி காரணமாக ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சிலநூறு கிலோ மீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இது சுமார் 151 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *