சென்னை செப், 10
ஆதார் அட்டையை போன்ற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது. வேளாண்மை துறையில் டிஜிட்டல் முறையை புகுத்தும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வருகிற மார்ச் மாதத்திற்குள் இந்த அட்டை வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் விலை பொருள்களுக்கான ஆதரவு விலை, விவசாய கடன் உள்ளிட்டவற்றை எளிதில் பெறலாம்.