விழுப்புரம் செப், 5
திட்டமிட்டபடி விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி தவெக மாநாடு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் மாநாடு ஜனவரி மாதம் தள்ளி போவதாக தகவல்கள் வெளியானது ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் மாநாட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த வாரம் மாநாட்டு திடலை விஜய் பார்வையிட உள்ளதாகவும் முக்கிய பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.