Spread the love

திருவாரூர் ஆக, 30

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைத்து கிராம, நகர்புறங்களில் பணிகள், சுகாதாரம் மற்றும் திடகழிவு மேலாண்மை தொடர்பாக நம்ம ஊரு சூப்பரு என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் தூய்மை பணியில் ணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தொடங்கி வைத்தார். முகாமில் கொடிக்கால்பாளையத்தில் இயங்கி வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் வட்டார மருத்துவ அலுவலர் குருதேவ் தலைமையில் டாக்டர் ஸ்ரீமதி மற்றும் செவிலியர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *