சென்னை ஆக, 31
தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்களை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் இன்று வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.