கோவை ஆக, 31
வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு, மு.க.ஸ்டாலினை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரும் நோக்கில் வந்ததாக கூறினர் என தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு தொடர்பாக சில நாட்களுக்கு முன் வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.