சென்னை ஆக, 23
இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும். நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அதையடுத்த நாளான திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விடுமுறை விடப்படுகின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் முக்கிய பணிகள் இருப்பின் என்று முடித்துக் கொள்வது நல்லது.