புதுடெல்லி ஆக, 18
வங்கி நிதி மோசடி வழக்குகளில் ₹65,279 கோடி சொத்துக்களை ED இதுவரை பறிமுதல் செய்துள்ளது. மத்திய அரசிடம் இருக்கும் புள்ளி விபரங்களின்படி கடந்த சில ஆண்டுகளில் ஈடு வங்கி நிதி மோசடி தொடர்பாக 1160 வழக்குகளை விசாரணைக்கு எடுத்து 174 பேரை கைது செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 437 உத்தரவுகள் மூலம் மோசடியாளர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.