Spread the love

விழுப்புரம் ஜூலை, 27

போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் அனைத்து விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் புதிய கண்டக்டர், ஓட்டுநர்கள் நியமிக்கப்படவில்லை என்றார். கடும் நிதிச் சுமையில் இருந்த போக்குவரத்து கழகம் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்று வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *