சென்னை ஜூலை, 25
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் ஜூலை 29 முதல் சீருடை வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து சீருடை காலணிகள் கொள்முதல் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். ஆகஸ்ட் இறுதிக்குள் புத்தகப்பை, வண்ண பென்சில்கள் போன்றவையும் வழங்கப்படும் என்றனர்.