புது டெல்லி ஜூலை, 20
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மனோஜ் சோனி பதவி விலகியுள்ளார். 2017இல் யுபிஎஸ்சி உறுப்பினரான சோனி 2023 மே 16 இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஐந்து ஆண்டுகள் மீதம் உள்ள நிலையில், குடியரசு தலைவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை. அவர் ஆன்மீக தொண்டு புரிய பதவி விலகியதாக கூறப்படுகிறது.