சென்னை ஜூன், 28
துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டதாக கூறிய அவர், அனைவருக்கும் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கும் என்றார். இதனுடைய அடுத்த இரண்டு நாட்களில் ஜூன் மாதம் முடிய உள்ளதால் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள் உடனே சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.