சென்னை ஜூன், 23
ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 50% மானியத்தில் 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் புல்நறுக்கும் கருவிகள் வழங்கப்படும் என்றும், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவியருக்கு விடுதி கட்டப்படும் என்றும் கூறினார்.