சென்னை ஜூன், 19
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வந்த நிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அரசின் புதிய அறிவிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.