கள்ளக்குறிச்சி ஜூன், 20
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்த 32 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக கோவிந்தராஜன், தாமோதரன் ஆகியோர் ஏற்கனவே கைதாகி உள்ள நிலையில் தற்போது கோவிந்தராஜனின் மனைவி விஜயா கைது செய்யப்பட்டுள்ளார்.