சென்னை ஜூன், 19
நீட் தேர்வில் மிகச் சிறிய தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு குறித்த மனுவை விடுமுறை கால சிறப்பு அமர்வு விசாரித்தது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தேர்வு முகமையும், மத்திய அரசும் உரிய நேரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியதோடு தங்கள் பதில்களை புதிதாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.