தேனி மே, 5
சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் தேனியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.