Spread the love

சிவகங்கை, ஏப்ரல், 29

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் இன்று தொடங்க உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

சிவகங்கை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15நாட்கள் நடத்தப்படவுள்ளது. தடகளம், கால்பந்து, கோகோ, கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் மே 13வரை வரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ,மாணவியர், மாணவரல்லாதோர் கலந்து கொள்ளலாம். பயிற்சி காலை 6மணி முதல் 8வரையிலும் மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் நடத்தப்படும். பயிற்சி கட்டணம் ரூ.200 வீதம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும். ரொக்கமாகப் பெறப்படாது. கலந்து கொள்பவர்கள் 74017 03503 மற்றும் 04575 299293என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆதார் கார்டு நகல் சமர்ப்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *