தேனி ஏப்ரல், 29
கடமலை மயிலை ஒன்றியம் பொன்னம்படுகை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்களின் வசதிக்காக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பயன்பாடின்றி உள்ளது.மேலும் பராமரிப்பின்றி போனதால், முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்து விஷ ஜந்துக்கள் உலாவும் இடமாகவும் மாறியுள்ளது.
இதனால் பேருந்திற்கு காத்திருக்கும் மக்கள் மிகுந்த சிரமடைந்துள்ளனர். மேலும் இந்த நிழற்குடையை அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில் இதனை சீரமைத்து பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.