நெல்லை ஏப்ரல், 28
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மது பிரியர்கள் பீர் வகைகளை நாட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாதாரண நாட்களில் தினசரி 70 முதல் 80 ஆயிரம் வரை பீர் பெட்டிகள் விற்பனையாவது, தற்போது கோடை காலத்தில் 1.30 லட்சம் பெட்டிகள் வரை விற்பனையாவதாக நெல்லை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.