நாமக்கல் ஏப்ரல், 14
அதிமுக யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை தங்களது கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அண்ணாமலை அல்ல என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 2021 இல் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் இன்று அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும். ஆட்சி அமையாமல் போனதற்கு பாரதிய ஜனதா கட்சி தான் காரணம் அதிமுக குறித்து பேச அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் கிடையாது என விமர்சித்தார்.