Spread the love

தென்காசி ஆக, 27

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. அவ்வப்போது வெயிலும் அடித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் நெருக்கடி இன்றி ஆனந்தமாக அருவிகளில் குளித்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *