திருச்சி ஏப்ரல், 67
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியாபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசும்போது, “நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். இந்நிலையில் இம்முறை நான் உங்களின் பேர் ஆதரவோடு தேர்தலில் நிற்கிறேன் நான் வெற்றி பெற்றவுடன் 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை பெறவும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மீண்டும் வரும் ஆண்டுகளில் 1200 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பெற வழிவகை செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.
உடன் இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மைச் செயலாளர் சத்யநாதன், அன்புதுரை துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சபா ராஜேந்திரன் செந்தில் ராஜ்குமார் தமிழரசி மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரச்சாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி ஏற்றி வெற்றி திலகம் இட்டு வரவேற்றனர்.