திருப்பூர் ஆக, 26
தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழக மின் வாரியத்தில் வயா்மேன், போா்மேன், பொறியாளா்கள், கள உதவியாளா்கள், கணக்கீட்டாளா்கள் என 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலிப்பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ஆகவே, தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.