கன்னியாகுமரி மார்ச், 22
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி முதல் கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.