புதுடெல்லி மார்ச், 21
மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளில் கணக்குகள் பராமரிக்க வரும் 31ம் தேதி வங்குகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதி ஆண்டுக்கான அரசின் நிதி விபரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.