ராமநாதபுரம் மார்ச், 21
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சத் தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20 மீனவர்களை கைது செய்து மூன்று விசைப்படகுகளையும் சிறை பிடித்து சென்றனர். ஏற்கனவே 21 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்ததோடு, மேலும் 20 பேரை கைது செய்துள்ளனர்.