Spread the love

திருப்பதி ஆக, 26

ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

திருப்பதியில் தரிசனத்திற்கா ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மழையில் நனைந்தபடி பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் கடும் குளிர் வீசுவதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *