தர்மபுரி பிப், 23
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்ற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறி பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கி சம்பவம் தற்போது பரபரப்பாக உள்ளது.
இது சம்பந்தமாக வீடியோ வெளியான நிலையில் நேற்று பேருந்து ஓட்டுனர் சசிகுமார், நடத்துனர் ரகு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.