சென்னை பிப், 10
தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வறையிலும் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டு இருக்கும். இதன் மூலம் ஒரு தேர்வறையில் அருகருகே அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வினாத்தாள் வகை மாற்றி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.