ராமேஸ்வரம் பிப், 8
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்வதையாகி வரும் நிலையில், இன்று அதிகாலையில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களிடமிருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.