Spread the love

விருதுநகர் ஆக, 25

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதனைதொடர்ந்து நேற்று 11 உண்டியல்கள், ஒரு கால்நடை மற்றும் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.76 லட்சத்து 62 ஆயிரத்து 394ம், தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.

மேலும் காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, ஐயப்ப சேவா சங்கம், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் ஆகியோரின் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *