துபாய் ஜன.23
ஐக்கிய அரபு அமீரக துபாய் உள்ள எடிசலாட் அகாடமி உட்புறத்தில் துபாய் முத்தமிழ் சங்கம் மற்றும் 89.4 எப்எம் இணைந்து முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் இராமச்சந்திரன், தலைவர் ஷா மற்றும் 89.4 எப்எம் நிர்வாகி ஸ்ரீனிவாசன் தலைமையில் மற்றும் முத்தமிழ் சங்கத்தின் துணைதலைவர் பிரசாத் நிர்வாகிகள், ஷாஹுல் ஹமீது ஆகியோர் முன்னிலையில் மணியரசு, எஃப்சன் பாலா, தங்கதுரை, ரமேஷ், சின்னா ஆகியோர் ஒருங்கிணைப்பில் மிக பிரமாண்டமான பொங்கல் விழா நடைபெற்றது.
மேலும் காலை ஆரம்பித்து இரவு வரை, ஆடல், பாடல், சிலம்பாட்டம் பட்டிமன்றம், கோலம் போட்டி, தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த தேசிய விருது பெற்ற கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், கோகுல் பிரசாத் மற்றும் அமீரக தமிழ் பாடகி மிருதுளா பாடல், பல்வேறு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு ஆர்ஜே லட்சுமிபிரியா தொகுத்துவழங்க மிகசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு கௌரவ விருந்தினராக, தமிழ் நாட்டிலிருந்து திரைப்பட இயக்குனர் பி வாசு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக ரேடியன்ட் ஸ்டார் நிறுவனர் ஆபித் ஜுனைத், பெருமாள் பூக்கடை நிறுவனர் பெருமாள், KRG குரூப் கண்ணன் ரவி, தனூப் நிர்வாகி ராமசாமி, அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர்கள், கல்லிடைக்குறிச்சி முனைவர் முஹைதீன், மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத், சமூக சேவகி முனைவர் ஜாஸ்மீன், பகவதி ரவி, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, கள்ளக்குறிச்சி சின்னா, எமிரேட்ஸ் நியான் உஸ்மான். பாளையங்கோட்டை ரமேஷ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் மேலும் பார்வையாளர்களாக டிக்டாக் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக முத்தமிழ் சங்கத்தின் தலைவர் ஷா நன்றி கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.