சென்னை ஜன, 21
தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராகவும், ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராகவும், மாற்றப்பட்டனர். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும், பழனிச்சாமி நில நிர்வாக துறை ஆணையராகவும், ஜடக் சிறு மீன்வளத்துறை ஆணையராகவும், செல்வராஜ் சாலை திட்டம் துறையின் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.