சேலம் ஜன, 9
திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த மாதம் நடைபெற இருந்த இம்மாநாடு புயல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 21 மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் இம்மாநாடு திமுகவிற்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.