தென்காசி டிச, 18
நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அத்யாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தென்காசியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் பல பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.