காஞ்சிபுரம் டிச, 4
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். மேலும் இன்று காற்றுடன் சேர்ந்த மழை அதிக அளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வர வேண்டாம் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.