காஞ்சிபுரம் நவ, 27
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வரிசையில் காஞ்சிபுரத்தில் 9.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ஆனால் இன்று காஞ்சிபுரம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அதேபோல செங்கல்பட்டு மற்றும் சென்னையிலும் கல்வி நிலையங்கள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.