செங்கல்பட்டு நவ, 24
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் வெல்கம் ஹோட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7, 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் முன்னிலையில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ராமு ஜிஜேந்திரன் தனது தோளில் முதலீட்டாளர் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார்.