கோவை நவ, 24
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டு வாங்க கடந்த ஜூலை 2021 ஆண்டு குறைந்தபட்ச கூலித் தொகை ரூ.425.40 அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15 ம் தேதி 2021 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சார்பில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்களுடன் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 2021 முதல் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிலவைத் தொகை பெற்று தரப்பட்டது இதன் மூலம் தனியா தோட்ட தொழிலாளர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தமிழகத்தில் உள்ள டேண்டீ அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அமைத்துள்ள சிங்கோனா, நடுவட்டம், குன்னூர், நீலகிரி ஆகிய இடங்களில் சுமார் 10,000 தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சம்பள நிலுவைத் தொகை ஒரு குடும்பத்திற்கு 80,000 வரை வழங்க வேண்டிய உள்ளது. இந்த நிலுவை தொகை கேண்டி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினருடன் ஏற்படுத்திய ஒப்பந்த அடிப்படையில் இந்த சம்பள நிலவத் தொகையை தனியார் தோட்டங்களுக்கு முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது