சென்னை நவ, 22
புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் புதிய பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பரிந்துரை குழு அழைத்த அறிக்கையில் பள்ளி பாட புத்தகங்களில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என பெயர் மாற்றம் செய்யவும், மூன்று முதல் 12 ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இந்து அரசர்களின் வெற்றிகளை இடம்பெற செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.