கடலூர் நவ, 18
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை அரியலூர் மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே குமரி, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் அங்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.