சென்னை நவ, 9
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இச்சட்டத்தை ஏற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு எனவும் நிறுவனங்கள் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.