மும்பை அக், 30
காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் பேசிய அவர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் லாபத்திற்காக காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எவ்வாறு நடந்து கொண்டது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.