சென்னை அக், 23
சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பீகார் அரசு வெளியிட்டு இருக்கிற சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சட்டரீதியான விளைவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மத்திய அரசு எனவே மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் இந்திய கூட்டணியின் அஜண்டாவில் இதுவும் ஒன்றுதான் என்றார்.