ஊட்டி ஆகஸ்ட், 20
ஊட்டி அருகே நஞ்சநாடு, இத்தலார் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லக்கொரை முதல் பி.மணிஹட்டி சாலை, இத்தலார் முதல் குந்தா சாலையில் சேதமடைந்த பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி மாவட்ட வருவாய் அலுவலர் துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ், குந்தா வட்டாட்சியர் இந்திரா ஆகியோர் உடனிருந்தனர்