அமெரிக்கா அக், 3
மெக்சிகோவின் சீயூடாட் மடேரா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞானஸ்தானம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் துரதிஷ்டவசமாக 10 பேர் உயிரிழந்தனர் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 23 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.